விஜய், புலி படக்குழுவினர் வீடுகளில் ரெய்டு ஏன்?: பரபர தகவல்கள்!
சென்னை: புலி படம் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை வைத்து எடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்தே வருமான வரித்துறையினர் விஜய் மற்றும் படக்குழுவினரின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்களாம்.
விஜய் ஆசை, ஆசையாக நடித்து முடித்துள்ள படம் புலி. படத்தின் கதையை சிம்புதேவன் கூறியதுமே வாவ், இந்த படம் நிச்சயம் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும், இதில் நான் நிச்சயம் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பின்போது முழு ஈடுபாட்டோடு நடித்து சிம்புதேவனை அசத்தினார் விஜய். படத்தின் இரண்டு டிரெய்லர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
புலி
புலி படம் நாளை ரிலீஸாக உள்ளது. புலி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் ரிலீஸாக உள்ளது. பட ரிலீஸை கொண்டாடித் தீர்க்க ரசிகர்கள் ஏற்கனவே தயாராகிவிட்டார்கள்.
கருப்பு பணம்
புலி படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்ட நிலையில் அந்த படம் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை கொண்டு எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது.
ரெய்டு
தகவல் கிடைத்த உடன் வருமான வரித்துறையினர் இன்று காலை சென்னையில் உள்ள விஜய்யின் வீடு, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள புலி படக்குழுவினரின் வீடுகளுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
அதிர்ச்சி
விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது திரை உலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.