ஒருபக்கம் பேச்சுவார்த்தை:மறுபக்கம் ஏன் டிஸ்மிஸ் செய்ய கூடாது என நர்ஸ்களுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்

ஏன் பணிநீக்கம் செய்யக்கூடாது என கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏன் பணிநீக்கம் செய்யக்கூடாது என கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொகுப்பூதியத்தின் அடிப்படையில் வேலை பார்த்து வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, ஊதிய உயர்வு கோரியும் சென்னையில் இரண்டாவது நாளாக செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

why not sack you? Health department issued notice to the nurses

அமைச்சர் விஜயபாஸ்கருடன் செவிலியர்கள் பிரதிநதிகள் 20 பேர் தங்களின் கோரிக்கைள் குறித்து தலைமைச்செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் போராட்டம் நடத்தும் செவிலியர்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எவ்வித தகவலும் அளிக்காமல் விடுமுறை எடுத்தது ஏன் என்றும் நோட்டீஸ் மீது செவிலியர்கள் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவை காரணமாக அனைத்து செவிலியர்களும் நாளை பணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் எந்தவித அறிவிப்பும் இன்றி போராட்டம் நடத்தும் செவிலியர்களை ஏன் பணி நீக்கம் செய்ய கூடாது? பொது சுகாதாரத்துறை கேள்வி எழுப்பியுள்ளது. தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் செவிலியர்கள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே நோட்டிஸ் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+