பதவி சுகம் அனுபவித்தபோது பேசாமல் இப்போது சீறுகிறாரே ஓ.பி.எஸ்.. ஸ்டாலின் விளாசல்
சென்னை: முதல்வராக பதவி வகித்த வரை ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறாத ஓ.பன்னீர்செல்வம் தற்போது நீதி விசாரணை கோருவது ஏன் என்று ஸ்டாலின் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைமை செயலகம், அமைச்சர்கள் அறை, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஜெயலலிதா படத்தை உடனடியாக அகற்றத் தவறினால், கோர்ட்டிற்கு செல்லும் நிலை ஏற்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்திருந்தார். ஜெயலலிதா படமே இல்லாத தமிழகத்தை உருவாக்க நேரிடும் என்றும் கூறியிருந்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
இதுகுறித்து ஓ.பி.எஸ். கூறுகையில் மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஒரு தன்னிகரில்லாத தலைவியை பார்த்து ஸ்டாலின் இவ்வாறு கூறுவது கண்டனத்துக்குரியது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டாலின் கூறுவதாக ஓ. பன்னீர் செல்வம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

ஸ்டாலின் பதிலடி
இதற்கு உரிய பதிலடி தரும் வகையில் சென்னையில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் போயஸ் தோட்டத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு ஆதரவாக இருந்தவர் ஓ பன்னீர் செல்வம். அவர் பதவியில் இருக்கும் வரை ஜெயலலிதாவின் மரணம குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பதவிக்கு ஆபத்தால்
தன்னுடைய முதல்வர் பதவியை தக்க வைத்து கொண்டது வரை மௌனமாக இருந்து விட்டு, பதவிக்கு ஆபத்து வந்தவுடன் தியான போராட்டம் நடத்திய பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார். இந்த திடீர் அரசியல் விசுவாசத்துக்கு என்ன காரணம். பதவிக்காக தங்கள் கட்சித் தலைவரின் மரணத்தின் மர்மங்கள் குறித்து கண்டுகொள்ளாதவர்கள் அதிமுகவினர்.

மறக்கக் கூடாது
முதலில் தனக்கு பதவி வழங்கியர்களை மறந்து விட்டு பின்னர் தங்களுக்கு பதவி வழங்கியவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் அதிமுகவினர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார் ஸ்டாலின்.

திமுக தூண்டவில்லை
பன்னீர் செல்வத்தின் திடீர் புரட்சியின் பின்னணியில் திமுக உள்ளதாக சசிகலா தரப்பு அதிமுகவினர் கருதியிருந்த வேளையில் ல்டாலினை பன்னீர் செல்வம் எதிர்ப்பதும், அவரை ஸ்டாலின் எதிர்ப்பதும் தொடங்கியுள்ளது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications