பாரிவேந்தருக்கு என்னாச்சு... அறிவாலயம் பக்கம் தலைகாட்ட தயங்குவது ஏன்?
சென்னை: இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி எம்.பி.யுமான பச்சமுத்து என்ற பாரிவேந்தர் திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் இதுவரை கலந்துகொள்ளவில்லை.
அவர் சார்பாக ஐ.ஜே.கே. பொதுச்செயலாளர் ஜெயசீலன் மற்றும் அவரது மூத்த மகன் ரவி ஆகியோர் தான் கலந்துகொள்கின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் பெரம்பலூரில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இவர் வெற்றிபெற்றவர். அப்படியிருக்க திமுக நடத்தும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் இருந்து சற்று ஒதுங்கியே நிற்கிறார். கடைசியாக அவர் அண்ணா அறிவாலயம் வந்தது, தேர்தலில் வெற்ற பெற்றமைக்காக ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறுவதற்கு தான். அதற்கு பிறகு தேனாம்பேட்டை பக்கமே ஆளை பார்க்கமுடிவதில்லை.

இவரைப்போல் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன், சகஜமாக அறிவாலயம் வருகிறார், திமுக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர்கள் திமுகவுடன் சுமூகமாகதான் உள்ளனர். ஆனால், பாரிவேந்தர் மட்டும் விதிவிலக்காக வெற்றி பெற்றதோடு சரி அதன் பின் அறிவாலயம் வர தயக்கம் காட்டிவருகிறார். இவர் தமிழகம், சிக்கிம், ஆந்திரா, என பல மாநிலங்களில் பல்கலைக்கழகங்கள் நடத்தி வருகிறார். திமுக காங்கிரஸ் கூட்டணியில் அதிகம் ஒட்டி உறவாடி அதனால் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என நினைக்கிறாராம்.
ஏற்கனவே இவரது எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை தருவதாக இருந்து கடைசி நேரத்தில் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என ரத்து செய்தார். தேவையின்றி மத்திய அரசை பகைத்துக்கொள்ள வேண்டாம் என அவர் நினைப்பதாகவும், அதன் காரணமாகவே தன் சார்பில் தனது கட்சி பிரதிநிதிகளை மட்டும் திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தான் நாடாளுமன்றத்துக்கு சென்றது போல் தனது கட்சி சார்பில் ஒருவரை வரும் 2021-ல் சட்டமன்றத்துக்கு அனுப்ப பாரிவேந்தர் ஆசைப்படுகிறாராம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications