முண்டந்துறையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்.. உயிர் அபாயத்தில் வனவிலங்குகள்
நெல்லை: முண்டந்துறை வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவதால் அவற்றின் மூலம் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலையில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே முண்டந்துறை வனப்பகுதியில் அமைந்துள்ளது கரையார் சொரிமுத்து அய்யனார் கோயில். இங்கு கடந்த 14ம் தேதி முதல் ஆடி அமாவாசை திருவிழா நடந்தது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இபபகுதி புலிகள் காப்பக பகுதியாக இருப்பதால் வனதுறையினர் இங்கு வரும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

மேலும் பாபநாசம் மற்றும முண்டந்துறை சோதனை சாவடி, முண்டந்துறை வன அலுவலகம், எஸ்எம் கோயில் பீட் ஆகிய 4 இடங்களில் பக்தர்களிடம் சோதனை நடத்தி பிளஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஆனால் இதையெல்லாம் மீறி கோயில் அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. வனத்துறையினர் இவற்றை அகற்றாததால் வன விலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு வருகின்றன. இதனால் அவற்றின் உயிருக்கு ஆபதது ஏற்படும் சூழ்நிலை ஏறபட்டுள்ளது.

இதனால் வனத்துறையினர் உடனடியாக அங்கு குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அ்ப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேணடுகோள் விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications