For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி!

தமிழகத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த வாரம் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி அளித்து இருக்கிறார்.

தமிழகத்தில் சென்ற வருடம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த மாநாட்டில் பல நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் வந்து இருந்தார்கள்.

Will announce the date of World Investors Conference soon - TN.Gov

இதன் காரணமாக தமிழகத்தில் பல முக்கியமான முதலீடுகள் செய்யப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் கடந்த முறை போல் இப்போதும் மாநாடு நடத்தப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி அளித்து இருக்கிறார்.

அவர் தனது பேட்டியில் ''ஒரு வாரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும்.5 மாதத்திற்குள் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்'' என்றுள்ளார்.

மேலும் ''மாநாட்டிற்காக தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். இதற்காக முதல்வரிடம் கலந்தாலோசிக்க உள்ளோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Industrial minister MC Sampath says that they will announce the date of World Investors Conference soon. He also added that they will post a individual officer for the meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X