7 தமிழர் விடுதலை: மத்திய அரசு எதிர்ப்பு எதிர்பார்த்ததுதான்- சட்டப்படி செய்வோம்: ஜெயலலிதா
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
உச்சநீதிமன்றமும் 7 தமிழர் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். அப்போது மத்திய அரசின் எதிர்ப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஜெயலலிதா அளித்த பதில்:
இது எதிர்பார்த்துதான் அவர்கள் கோர்ட்டுக்கு செல்வார்கள் என்பது தெரியும். சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதை ஆராய்ந்து செய்வோம்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.