எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் போட்டியிடுவோம்.. கமல்ஹாசன் அதிரடி
தமிழகத்தில் எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் போட்டியிடுவோம் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் போட்டியிடுவோம் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அதன் தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். கமல்ஹாசன் இந்த கூட்டத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அதில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் பேசினார்.

அதில் ''மக்களுக்கான சிம்மாசனத்தை வடிவமைத்து கொண்டுள்ளோம்.நலமாக மக்கள் வாழும் பூமியை தயார் செய்து கொண்டுள்ளோம். கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும். உள்ளாட்சிதான் நமது பலம். எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.'' என்றார்
மேலும் ''ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாது; முதலில் குறைக்க வேண்டும், அடுத்து தடுக்க வேண்டும், கடைசியாக ஒழிக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் ஊழலுக்கு எதிராக களமாடும்'' என்றார்.
அதேபோல் நிர்மலா தேவி விவகாரம் குறித்து பேசிய அவர் ''நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
சீட் ஒதுக்கப்பட்ட பிறகு அப்செட்.. அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்? புரட்சி பாரதம் இன்று முடிவு! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம் -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
விஜயகாந்த் வெற்றி பெற்ற அதே தொகுதி.. சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் பிரேமலதா? -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி











Click it and Unblock the Notifications