பிறந்த நாளான டிச.12-க்குப் பின் போர் அறிவிப்பு வெளியிடப்படும்: ரஜினிகாந்த்
தமது பிறந்த நாளான டிசம்பர் 12-ந் தேதிக்குப் பின்னர் போர் அறிவிப்பு வெளியிடப்படும் என்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
சென்னை: தமது பிறந்த நாளான டிசம்பர் 12-க்குப் பின்னர் போர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், போர் வரும் போது உங்களை அழைக்கிறேன்.. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என அரசியலுக்கு வருவது குறித்து தெரிவித்திருந்தார். இதனை முன்வைத்து பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

இதனிடையே நடிகர் கமல்ஹாசன் தம்மை தீவிர அரசியலில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அரசியல் கட்சியைத் தொடங்காவிட்டாலும் ட்விட்டரை தமது பிரசார களமாக்கி வருகிறார் கமல்ஹாசன்.
இந்நிலையில் ஆந்திராவின் மந்திராலாயா சென்று வழிபாடு நடத்திவிட்டு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியலுக்கு தற்போது வர வேண்டிய அவசியம் இல்லை.
பிறந்த நாளுக்குப் பிறகு ரசிகர்களை சந்திப்பது குறிப்பும் போர் குறித்தும் அறிவிப்பேன் என கூறினார் ரஜினிகாந்த்.












Click it and Unblock the Notifications