தினகரன் திடீர் எழுச்சி.. மொத்த அதிமுகவும் அவர் வசமாகுமா?
Recommended Video

சென்னை: டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெல்லும் நிலைக்குப் போய் விட்டதால் அதிமுகவினர் மத்தியில் அவருக்கு செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாறு காணாத வெற்றி என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட ஒரு சுயேச்சையாக இரட்டை இலையை தோற்கடிக்கிறார் தினகரன் என்பது மிகப் பெரிய விஷயம். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
நிச்சயம் இந்த வெற்றி, தினகரனே சொன்னது போல தமிழக அரசியலில் பெரும மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

அதிமுகவில் வருமா சலசலப்பு
இந்த தேர்தல் வெற்றிக்குப் பிறகு உடனடியாக நடக்கும் என்றால் அது அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்படும் என்பதுதான். நிச்சயம் தினகரனுக்கு கட்சியினர் மத்தியில் ஆரவாரம் அதிகரிக்கும், ஆதரவு அதிகரிக்கும்.

இலையை யூஸ் பண்ணலையே
லடடு போல இரட்டை இலை கிடைத்தும், ஆட்சி அதிகாரம் கையில் இருந்தும் கூட ஜெயிக்க முடியாத நிலையில்தான் அதிமுக உள்ளது என்பதை கட்சியினர் ஜீரணிக்க மாட்டார்கள். அதுவும் எம்ஜிஆர் நினைவு நாளில் அவர் கண்ட சின்னத்தை இப்படிக் கேவலப்படுத்தி விட்டார்களே என்ற ஆதங்கம் அவர்களிடம் எழுந்துள்ளது.

தினகரன் விட மாட்டார்
எனவே நிச்சயம் இதை தினகரன் தனக்கு சாதகமாக திருப்புவார். ஊர் ஊராகப் போய் அதிமுகவினரை இனி தைரியமாக சந்திக்கலாம். அவர்களும் இவர் பின்னால் அணி திரளலாம்.

சாதாரண விஷயமல்ல
பண பலத்தை மட்டுமே நம்பி தினகரன் தேர்தலை சந்தித்திருப்பார் என்று வைத்துக் கொண்டாலும் கூட மிகப் பெரிய சின்னமான இரட்டை இலையை அவர் வீழ்த்தியிருப்பது நிச்சயம் அதிமுகவினர் மத்தியில் அவருக்கு ஆதரவாக திரும்பக் கூடிய வாய்ப்புகளே உள்ளன.
எனவே விரைவில் அதிமுக தினகரன் பக்கம் திரும்பினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.












Click it and Unblock the Notifications