மதிமுகவுக்கு ஆதரவு: ஆதரவாளர்களுடன் பேசி முடிவு எடுப்பேன்- அழகிரி
Subscribe to Oneindia Tamil
மதுரை: எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று அழகிரி தெரிவித்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழகிரியை இன்று காலை அவரது மதுரை வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு அழகிரியை கேட்டுக் கொண்டார். அழகிரியுடனான சந்திப்பு நல்லபடியாக நடந்ததாக அங்கிருந்து வெளியே வந்த வைகோ தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து அழகிரி கூறுகையில்,
இது குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசிப்பேன். அதன் பிறகு இது குறித்து தெரிவிக்கிறேன் என்றார்.
பின்னர் அவர் தனது ஆதரவாளர் இல்ல காதணி விழாவில் கலந்து கொள்ள ராஜபாளையம் கிளம்பிச் சென்றார்.












Click it and Unblock the Notifications