"அவமானம்" 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா அறிவிப்பு.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி தப்புமா?
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் ஒரே நேரத்தில் 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருந்து வருகிறார். திண்டிவனம், செஞ்சி மற்றும் மயிலம் சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.

மஸ்தான் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலை பொருத்தமட்டில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தோருக்கு சீட் கொடுக்கப்பட்டது. பெரும்பாலான பொறுப்புகள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கே வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சாராய வியாபாரி மரூர் ராஜாவுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த மாதம் திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து நகர்மன்றக் கூட்டத்திலிருந்து 13 திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அது மட்டுமல்லாமல் அமைச்சர் மஸ்தான் குறித்து திமுக தலைமைக்கு அந்த 13 கவுன்சிலர்களும் புகார் அளித்துவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றக் கூட்டம் நடந்தது. அப்போது 7ஆவது வார்டை சேர்ந்த திமுக கவுன்சிலர் புனிதா, தனது வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்திருந்தார்.
நகர்மன்றக் கூட்டத்தில் பேசிய திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் 13 பேரும் தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்யவில்லை. அதனால் பொதுமக்கள் மத்தியில் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. முதல்வர் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நகர்மன்றம் செயல்படுகிறது.
இதனால் நாங்கள் எங்கள் ராஜினாமா கடிதத்தை 13 பேரும் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்க போகிறோம் என கூறினர். இதையடுத்து அவர்கள் ராஜினாமா கடிதத்தை உயர்த்தி காட்டிவிட்டு வெளியேறிவிட்டனர். இந்த நிலையில் வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில் நாங்கள் கவுன்சிலர்களாக பதவி ஏற்று 18 மாதங்கள் ஆகின்றன. நகராட்சி எங்கள் வார்டுகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. நாங்கள் ஏதாவது கேட்டால் அமைச்சர் மஸ்தானின் மருமகன் ரிஸ்வானை கேளுங்கள் என்கிறார்கள். இவருடைய தலையீடு அதிகமாக இருக்கிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது செஞ்சி பேரூராட்சியில் தனது மகன் மொக்தியார் அலி மஸ்தானை களமிறக்கி ஜெயிக்க வைத்தார் அமைச்சர். இதனால் அவர் செஞ்சி பேரூராட்சி தலைவராக உள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளராகவும் மொக்தியார் அலி மஸ்தான் உள்ளார்.
மேலும் அமைச்சர் மஸ்தானுக்கு உதவியாளராக இருந்து வரும் மருமகன் ரிஸ்வான் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். அமைச்சரின் குடும்பத்தினரே கட்சி பொறுப்புகளில் இருந்து வருவதால் கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் திமுக நகராட்சி தலைவர் நிர்மலாவின் கணவர் கவுன்சிலர் ரவிச்சந்திரன் அந்த 13 பேரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதே இல்லை. வேண்டுமென்றே மஸ்தான் மீதும் ரிஸ்வான் மீதும் வீண் அவதூறு பரப்புகிறார்கள் என ரவிசந்திரன் கூறியுள்ளார். இதனால் திமுக தலைமை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் எச்சரிக்க விடுத்து பிரச்சினைகளை சரி செய்ய சொல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மஸ்தான் கருணாநிதி காலத்திலிருந்தே நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை பாயாமல் எச்சரிக்கை விடுக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள். எனினும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக தொண்டர்கள் இப்படி அதிருப்தியில் இருந்தால் அது கட்சியின் வெற்றியை பாதிக்கும் என திமுக நிர்வாகிகள் கருதுகிறார்கள்
-
டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே -
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தோல்வி உறுதி.. 2001ல் திமுகவே தோற்றிருக்கு.. டிகேஎஸ் இளங்கோவன் ஒரே போடு -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
சிபிஎம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள்.. ஓரிரு நாட்களில் தொகுதி உடன்பாடு முடியும்.. சண்முகம் அப்டேட்! -
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 234 தொகுதிகளும் என் கன்ட்ரோல்.. மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின் -
நயன்தாரா: சி.வி.சண்முகம், திண்டுக்கல்லார் பேச்சு வைரலாகியும் அதிமுக தலைமை ஏன் மவுனம்? என்ன நடக்கிறது -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்! -
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம்












Click it and Unblock the Notifications