தமிழ்நாட்டில் மாவட்டங்களில் ஆய்வுகள் தொடரும்... ஆளுநர் மாளிகை அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மாவட்டங்களில் அதிரடி ஆய்வுகள் தொடரும் என ஆளுநர் தரப்பு கூறியிருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் நடத்திய ஆய்வு குறித்து ஆளுநர் பன்வாரிலால் தரப்பு விளக்கம் அளித்து இருக்கிறது. அங்கு நடந்த ஆய்வுகள் போலவே தமிழ்நாடு முழுக்க ஆய்வுகள் தொடரும் என்று தனது விளக்கத்தில் ஆளுநரின் முதன்மை செயலாளர் கூறியுள்ளார்.

கோவையில் சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் என்று ஆய்வு நடத்தினார். மாவட்ட அதிகாரிகளிடம் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் கேட்டறிந்தார்.

 Will do more inspections - Tn governor

இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிலையில் இதே போன்ற சோதனைகளும் ஆய்வுகளும் தமிழ்நாடு முழுவதும் மேலும் நடைபெறும் என்று ஆளுநர் தரப்பு கூறியுள்ளது.

மேலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட முக்கிய அதிகாரிகளையும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு ஆளுநர் ஆய்வு நடத்துவார்; இந்த ஆய்வால் தமிழகம் மிளிரும்.,

மாவட்ட அதிகாரிகளின் செயல்பாடு குறித்து சோதனை செய்யவே இந்த ஆய்வு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச் சோதனையில் எந்த விதமான அரசியல் தலையீடும் இல்லை என்றும் ஆளுநரின் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+