கள்ளக்குறிச்சியில் 'அம்மா'....?
விழுப்புரம்: முதல்வர் ஜெயலலிதா கள்ளக்குறிச்சி தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதாக பெரும் பரபரப்பான எதிர்பார்ப்பு அத்தொகுதியில் ஏற்பட்டுள்ளது.
இதை அதிகப்படுத்துவது போல அங்கு சுவர் விளம்பரங்களையும் இப்போதே அதிமுகவினர் செய்து வருவதால் அதிமுகவினர் மத்தியில் மட்டுமல்லாமல், மற்ற கட்சியினரிடமும் கூட பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
குறிப்பாக தேமுதிகவின்தான் சற்று டென்ஷனாக காணப்படுகிறார்கள். காரணம், விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் அத்தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக அக்கட்சியினர் கருதுவதால்.

2 மாவட்டத் தொகுதி
கள்ளக்குறிச்சி தொகுதியானது 2 மாவட்டங்களில் கால் பரப்பி உள்ள தொகுதியாகும். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்தூர், ஏற்காடு, சங்கராபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷிவந்தியம், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இத்தொகுதியின் கீழ் வருகின்றன.

4 அதிமுக.. 2 தேமுதிக
இத்தொகுதியில் நான்கு தொகுதிகளை அதிமுகவும், 2 தொகுதிகளை தேமுதிகவும் வைத்துள்ளன.

கேப்டன் தொகுதி இங்கேதான்
விஜயகாந்த்தின் தொகுதியான ரிஷிவந்தியம் இந்தத் தொகுதியின் கீழ்தான் வருகிறது.

ஒரு அமைச்சர்.. ஒரு எதிர்க்கட்சித் தலைவர்
ரிஷிவந்தியம் தொகுதியின் விஜயகாந்த் சட்டசபை எதிர்க்கட்சி்த் தலைவராக இருக்கிறார். சங்கராபுரம் தொகுதியின் மோகன், ஊரக தொழில்துறை அமை்சராக இருக்கிறார்.

பிரேமலதாவின் சொந்த ஊர் இந்தப் பக்கம்தான்
விஜயகாந்த்தின் மனைவியான பிரேமலதாவின் சொந்த ஊர் சங்கராபுரம் தாலுகாவுக்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு கிராமம் ஆகும். எனவேதான் சுதீஷும் சரி, விஜயகாந்த்தும் சரி இந்தப் பக்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்தக் காரணத்தால்தான் விஜயகாந்த்தும், ரிஷிவந்தியத்தில் போட்டியிட முடிவு செய்தார்.

சுதீஷ் போட்டியிடத் திட்டம்
வரும் லோக்சபா தேர்தலில் சுதீஷ் இந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவர் நிற்காவிட்டால் பிரேமலதா நிற்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுதீஷ் போட்டியிடத் திட்டம்
வரும் லோக்சபா தேர்தலில் சுதீஷ் இந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவர் நிற்காவிட்டால் பிரேமலதா நிற்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் திடீரென...
இந்த நிலையில் ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் அதிமுகவினர் திடீர் சுவர் விளம்பரங்கள் மூலம் கவனம் ஈர்க்க ஆரம்பித்துள்ளனர். அதாவது நடைபெறவுள்ள, 2014 லோக்சபா தேர்தலில், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும், நாளைய பிரதமர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டு, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அந்த வாசகங்கள் கூறுகின்றன.

நிஜமாகவா...
இதனால் ஜெயலலிதா கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அல்லது, தேமுதிகவினர் மத்தியில் கிலியைக் கிளப்ப இப்படி சும்மானாச்சுக்கும் எழுதி வைக்கிறார்களா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
சொல்ல முடியாது.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்...!
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications