ம.ந.கூட்டணியின் ஒரு கட்சி திமுக பக்கம் சாய்ந்துவிட்டது... உதயசூரியனை பம்பரம் ஆதரிக்குமா?
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுடன் மதிமுக கூட்டணி அமைத்து செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை : சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் திமுகவுடன், மதிமுக கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்கள் நலக் கூட்டணி கலைக்கப்பட்ட பின்னர் திமுகவுடன் நட்பு பாராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவிற்கு தனது ஆதரவை தெரிவித்து விட்ட நிலையில், அடுத்து அந்த கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளை நோக்கி அரசியல் விமர்சகர்களின் பார்வை திரும்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அவருடைய இரும்புக் கோட்டையான ஆர்.கே நகர் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. உண்மையிலேயே அதிமுகவின் பலம் என்ன, மற்ற கட்சிகளின் பலம் என்ன என்பதை தீர்மானிக்கப் போகும் தேர்தலாகவே இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாத இடைத்தேர்தல் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஈகோ போராக பார்க்கப்பட்ட நிலையில் 7 மாதத்தில் அரசியல் சக்கரம் மாறி விட்டது. இப்போது இந்த இடைத்தேர்தல் அதிமுக, அதிமுகவை நழுவ விட்ட தினகரன் அணி இடையிலான கடுமையான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த அணிகளின் போட்டியால் அதிமுகவின் வாக்குகள் சிதறும் என்பதால் எதிர்க்கட்சியாக பலமான கூட்டணி அமைத்து வெற்றி பெற திட்டம் போடுகிறது திமுக.

விடுதலை சிறுத்தைகள் ஆதரவு
திமுகவிற்கு காங்கிரஸ், மனிதநேயமக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 2016 சட்டமன்றத் தேர்தலின் போது 3வது கூட்டணி அமைத்த மக்கள் நலக் கூட்டணி பிளவுபட்ட நிலையில் அந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்யப் போகிறார்கள்?
நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றன. இதற்கிடையில் மக்கள் நலக்கூட்டணியும் பிளவுபட்ட நிலையில் திமுகவுடன் இந்த கட்சிகள் கைகோர்க்கும் என்று சொல்லப்பட்டது. கடந்த முறை ஆர்.கேநகர் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தனிதது களத்தில் போட்டியிட்டது,இந்நிலையில் இந்த கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மதிமுக கூட்டணி வைக்குமா?
இதே போன்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதத்தில் முரசொலி பவளவிழா நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். இதன் மூலம் அவர் திமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப் போகிறார் என்று அப்போது முதலே அரசியல் வட்டாரத்தில் பரபரப்புகள் கிளம்பின. இந்நிலையில் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மதிமுக திமுகவிற்கு ஆதரவு தருமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வைகோவின் தேர்தல் நிலைப்பாடு?
இதனிடையே டிசம்பர் 3ம் தேதி கட்சியின் உயர்மட்டக் குழு கூடி தேர்தலில் போட்டியா அல்லது ஆதரவா என்பதை முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதயசூரியனோடு பம்பரம் இணையுமா அல்லது தேர்தலை புறக்கணிக்குமா என்பதை பொருத்தே வைகோவின் அடுத்தகட்ட தேர்தல் நிலைப்பாடுகளும் இருக்கும் என்று கருதுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
-
ஆளுநர் ரவி இடமாற்றம் செய்யப்பட்டது திமுகவிற்கு நிச்சயம் சவாலானது.. அரசியல் விமர்சகர்கள் கூறுவது என்ன? -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
காமராஜரின் முதல் தோல்வி.. அண்ணாவின் கடைசி வெற்றி.. மறக்க முடியாத 1967 சட்டசபை தேர்தல்! -
Rajya sabha: அன்புமணி வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என ராமதாஸ் தரப்பு எதிர்ப்பு.. பரிசீலனையின்போது பரபர! -
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்! -
புதுச்சேரி கூட்டணியில் குஸ்தி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் தனித்து போட்டி.. திமுக ஷாக்! -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
"திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் எதிர்பார்க்கிறோம்".. கமல்ஹாசன் சொன்ன சேதி! -
அதிமுக vs திமுக.. தொழில் துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி என்ன? டேட்டாவுடன் வந்த டிஆர்பி ராஜா! -
தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்.. 59 ஆண்டுகள் முன் அண்ணா ஆட்சிக்கு வந்த வரலாறு












Click it and Unblock the Notifications