அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம்: ஈவிகேஎஸ் இளங்கோவன்!
சென்னை: தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை மக்கள் முன்பு விரைவில் வெளியிடப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அமைச்சர்கள் ஊழல் குறித்து ஆளுநரிடம் கடந்த மே மாதம் மனு அளித்துள்ளோம். அந்த மனு பரிசீலிக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே மக்கள், ஊடகங்கள் முன்பு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவோம்.

கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஜெயலலிதா ஆரம்பத்தில் எதிர்க்காமல் இருந்திருந்தால் தற்போது 4 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி ஆகியிருக்கும் என்றும் கூறினார்.
மேலும் அவர், 4 ஆயிரத்தில் தமிழகத்துக்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் 2016 சட்டசபைத் தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருவதாகவும் ஈவிகேஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications