Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பு மிடாஸை உதறுவாரா சசிகலா?

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள சசிகலா கட்டுப்பாட்டில் மிடாஸ் மதுபான தொழிற்சாலை உள்பட 13 நிறுவனங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாராய ஆலை அதிபராக இருந்து கொண்டு முதல்வராக சசிகலா பதவி வகிக்க முடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா நடராஜனாக இருந்து ஜெயலலிதாவின் தோழி உடன்பிறவா சகோதரியாகி, அதிமுகவினரின் "சின்னம்மா"வான சசிகலா, அதிமுக பொதுச்செயலாளரானார். விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.

சசிகலாவின் வலதுகரமாக இப்போது இருப்பது சிவகுமார். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் பிரபாவின் கணவர்தான் இந்த சிவகுமார். இவர்தான் 'மன்னார்குடி வகையறாக்களின்' 13 கம்பெனிகளையும் நிர்வகித்து வருகிறார்.

இக்கம்பெனிகளில் ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா டிவியின் மாவிஸ் சாட்காம் ஆகிய இரண்டில் சசிகலா முக்கிய பங்குதாரரர். அதேபோல் சசிகலாவின் மற்றொரு சகோதரர் ஜெயராமனின் மருமகன் கே. கார்த்திகேயனும் மன்னார்குடி வகையறாக்களின் பெரும்பாலான கம்பெனிகளின் போர்டில் இடம்பெற்றிருப்பவர்.

மாவிஸ் சாட்காம்

மாவிஸ் சாட்காம்

1998ஆம் ஆண்டு ஜெயா டிவியை தொடங்கியது மாவிஸ் சாட்காம். இதன் போர்டில் சிவகுமாரும் கார்த்திகேயனும் இடம்பெறவில்லை. ஆனால் சிவகுமாரின் மனைவி பிரபா சிவகுமார்தான் நிர்வாக இயக்குநர். பிரபாவின் சகோதரி அனுராதாவும் ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர். அனுராதா, சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மூத்த மகனான டிடிவி தினகரனை திருமணம் செய்துள்ளார். இந்நிறுவனத்தில் 81% பங்குகளை வைத்திருப்பவர் சசிகலா.

மன்னார்குடி குடும்பம்

மன்னார்குடி குடும்பம்

சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனங்கள் ஜெயா டிவியின் மாவிஸ் சாட்காமில் தலா 4% பங்குகளை வைத்துள்ளன. எஞ்சிய பங்குகள் 'மன்னார்குடி குடும்பத்தினரிடமே உள்ளன.

மிடாஸ் கோல்டன் டச் டிஸ்டில்லரீஸ்

மிடாஸ் கோல்டன் டச் டிஸ்டில்லரீஸ்

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுமாத்தூர் கிராமத்தில் மிடாஸ் தொழிற்சாலை அமைந்துள்ளது. ஜெயலலிதா 2வது முறையாக முதல்வரான போது 2002ஆம் ஆண்டு இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில்தான் என்று இல்லை திமுக ஆட்சியிலும் கூட மிடாஸ் தொழிற்சாலையில் இருந்து மதுபானங்கள் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும்.

வரிசை கட்டும் நிறுவனங்கள்

வரிசை கட்டும் நிறுவனங்கள்

ஸ்ரீ ஜெயா பைனான்ஸ் நிறுவனம் இளவரசி வசம் 90% பங்குகள் உள்ளன. இந்த நிறுவனம் நீண்டகால கடனாக ரூ15.97 கோடி வாங்கியுள்ளதாம்.
குரியோ ஆட்டோ மார்க் ஏ வோல்ர்ட் ராக் ஆவிரி ப்ராபெர்ட்டீஸ் பேன்சி ஸ்டீல்ஸ் காட்டேஜ் பீல்ட் ரிசார்ட்ஸ் ஸ்ரீஹரி சந்திரா எஸ்டேட்ஸ் ஆகிய கம்பெனிகளும் சசிகலாவின் உறவினர்கள் வசமே உள்ளன.

முதல்வராக உள்ள சசிகலா

முதல்வராக உள்ள சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவைப் பயன்படுத்தி சசிகலாவின் குடும்பத்தினர் உருவாக்கிய நிறுவனங்கள் இவை. இவற்றின் ஏகபோக முதலாளியான 'தொழிலதிபர்' சசிகலாதான் இனி தமிழக முதல்வராக பதவி வகிக்கப் போகிறார். இதற்கு சட்டம் இடம் கொடுக்குமா? என்பது கேள்விக்குறியதாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+