மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு.. மீண்டும் ஒரு சட்டைக் கிழிப்பு.. தலையெழுத்துடா தமிழா!
சென்னை: அதிமுக அம்மா கட்சி உடைந்து பிளந்திருப்பதால் மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையெல்லாம் பார்க்க வேண்டியது நமது தலையெழுத்தா என்று புலம்பல் மக்களிடையே அதிகரித்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா அதிமுகவைக் கைப்பற்றினார். பொதுச் செயலாளரானார். தொடர்ந்து முதல்வர் பதவிக்கும் ஆசைப்பட்டார். அதற்கு கிட்டத்தட்ட ஓ.பி.எஸ். கடைசி வரை அமைதியாக ஒத்துழைப்பு கொடுக்கவே செய்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் சினிமாவில் வருவது போல திடீரென பொங்கி எழுந்தார். சசிகலாவின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டார். இடையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பும் வரவே சிறைக்குப் போக வேண்டியதாயிற்று சசிகலாவுக்கு.

எடப்பாடி நம்பிக்கை வாக்கெடுப்பு
இதையடுத்து எடப்பாடி முதல்வரானார். அவர் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதையொட்டி நடந்த கூவத்தூர் கூத்துக்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

சட்டசபை கலாட்டாக்கள்
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது நடந்த மோதல்களையும் மக்கள் மறக்கவில்லை. குண்டுக்கட்டாக ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் தூக்கி வெளியேற்றப்பட்டது, தனபால் அவமானப்படுத்தப்பட்டது என விரும்பத்தகாத செயல்கள் நடந்தேறின.

மீண்டும் வருமா
தற்போது அதிமுக அம்மா கட்சி உடைந்துள்ளது. சில எம்.எல்.ஏக்கள், எடப்பாடி தரப்பின் அறிவிப்பை எதிர்த்துள்ளது. அதாவது தினகரன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே எடப்பாடி அரசு நீடிப்பது சிக்கலாகியுள்ளது. அது மெஜாரிட்டி பலத்துடன்தான் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆளுநர் என்ன செய்யப் போகிறார்
இன்று இரவு நடந்த அனைத்துமே ஒரு பெரும் குழப்பத்திற்கான ஆரம்பமே என்று தெரிகிறது. எனவே மீண்டும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருவாரா எடப்பாடி அல்லது அவரது அரசை ஆளுநர் டிஸ்மிஸ் செய்வாரா என்பது உள்பட பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
இதையெல்லாம் பார்த்துத் தொலைய வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து என்பது மட்டும் இப்போதைக்கு தெளிவாகத் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications