துபாய் தமிழர்களின் 5.5 டன் நிவாரணப் பொருள்.. ரூ.3.5 லட்சம் வரி கேட்டு அதிகாரிகள் அடம்
சென்னை: துபாய் வாழ் தமிழர்கள் அளித்துள்ள 5.5 டன் நிவாரணப் பொருட்களுக்கு துபாய் அரசு வரி விலக்கு அளித்துள்ள நிலையில் சென்னையில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் ரூ.3.5 லட்சம் சேவை வரி கேட்பது அவர்களை வேதனை அடைய வைத்துள்ளது.
வரலாறு காணாத கனமழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள், பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் துபாய் வாழ் தமிழர்கள் 5.5 டன் நிவாரணப் பொருட்கள் அளித்துள்ளனர். அதற்கு துபாய் அரசு வரி விதிக்காமல் தனது பெருந்தன்மையை காட்டியுள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனமோ நிவாரணப் பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல முன்வந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகளோ ரூ.3.5 லட்சம் சேவை வரி அளிக்க வேண்டும் என்கிறார்கள். நிவாரணப் பொருட்கள் தானே வரி விலக்கு அளியுங்கள் என்றால் அதற்கு தமிழக அரசின் அனுமதி தேவை என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அனுமதி பெற தமிழக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் எஸ்.எஸ். முயற்சி செய்து வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இப்பொருட்களை ட்யூட்டி ஃப்ரீயாக அனுமதிக்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும்.
இது பற்றி உதவ முன்வரும் நல்உள்ளங்கள் நந்தகுமார் என்பவரை 7708291643 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications