பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி பிளான் ரத்து? மத்திய அரசின் முடிவால் பின்வாங்குவாரா வேல்முருகன்?
சென்னை : நிலக்கரி சுரங்க அனுமதியைக் கண்டித்து பிரதமர் மோடிக்கு சென்னையில் கறுப்பு கொடி காட்டுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்திருந்த நிலையில், தற்போது நிலக்கரி சுரங்க டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வேல்முருகன் கறுப்புக் கொடி போராட்டத்தைக் கைவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னையில் கறுப்புக்கொடி காட்டுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்தது. டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்து சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என தவாக தலைவர் வேல்முருகன் அறிவித்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இது டெல்டா பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். தமிழ்நாடு சட்டப்பேரவையிலும், காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நிலக்கரி சுரங்கப் பணிகளுக்கான புதிய டெண்டரில் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

இந்நிலையில், தவாக தலைவர் வேல்முருகன், பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தைக் கைவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிலக்கரி சுரங்கத் திட்டத்தைக் கண்டித்து இன்று தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக சென்னை விமான நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கறுப்புக்கொடி காட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது நிலக்கரி சுரங்க டெண்டரில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி கைவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications