ஜெயலலிதா ஹெலிகாப்டரை சோதனை செய்வீர்களா? ஆவேசப்பட்ட வைகோ!
மதுரை: ஜெயலலிதா செல்லும் ஹெலிகாப்டரையும் சோதனை செய்யுங்கள் என்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் வைகோ ஆவேசமாக கூறினார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வழியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், வைகோ சென்ற காரையும் சோதனை செய்ய நிறுத்தினார்கள்.

காரில் இருந்து கீழே இறங்கிய வைகோ, தான் பயணித்த காரின் டிக்கியை திறந்து காட்டினார். அதில் இருந்த அவரது பெட்டி மற்றும் உடமைகள் அனைத்தையும் சோதனையிட போலீசாரிடம் கூறினார்.
அதே சமயம், "என்னுடைய வாகனத்தையும் உடமைகளையும் சோதனை செய்தது போல், ஜெயலலிதா பயணம் செய்கின்ற ஹெலிகாப்டர், கார் மற்றும் அவர் கூட்டங்களுக்கு செல்லும்போது கூடவே அணி வகுத்து செல்கின்ற வாகனங்களையும் சோதனை செய்யுங்கள்" என ஆவேசமாக கூறினார்.
உடனே, "நீங்கள் போங்கள் சார்... நீங்கள் போங்கள் சார்!" என்று அவரை உடனடியாக அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications