For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவில் தன்னை சேர்க்கவில்லை எனில் லோக்சபா தேர்தலில் படுதோல்விதான்.. அழகிரி எச்சரிக்கை

திமுகவில் தன்னை சேர்க்கவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி படுதோல்வி அடையும் என்று அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் தன்னை சேர்க்கவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி படுதோல்வி அடையும் என்று அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும். திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Without me, DMK cant win in any election says Alagiri

இதற்கு இடையில் செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள, பேரணி குறித்து அழகிரி சில திமுக கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். இன்றும் அவர் உரையாடல் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த தேர்தல் குறித்து மதுரையில் மு.க அழகிரி பேட்டியளித்துள்ளார்.

அதில், ஸ்டாலின் அவசர அவசரமாக தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளார். ஸ்டாலின் வேகமாக கட்சியை கைப்பற்ற முயற்சி செய்கிறார்.

திமுகவில் என்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பதில் எந்த தவறும் இல்லை. நான் அந்த கட்சிக்கு உழைத்து இருக்கிறேன். திமுக என்னுடைய தாய்க்கழகம். அதில் மீண்டும் இணைவேன்.

திமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். என்னை கட்சியில் சேர்க்கவில்லை என்றால் திமுக படுதோல்வி அடையும். நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Without me, DMK can't win in any election says Alagiri. He also added that, MK Stalin get over the party as most of the followers are with him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X