Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாவம் பார்த்த திருநள்ளாறு அர்ச்சகருக்கு உணவில் மயக்க மருந்து.. 20 சவரன் நகை திருடிய பெண்ணுக்கு வலை

Subscribe to Oneindia Tamil

திருநள்ளார்: பக்தர்கள் போல் நடித்து அர்ச்சகர் வீட்டில் தங்கி இரவோடு இரவாக 20 சவரன் நகை மற்றும் ரூ 1.40 லட்சம் பணத்தை திருடிச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

காரைக்கால், திருநள்ளாறு பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ரோகிணி (ஆணின் பெயர்) (60).இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

 Woman and youth looted 20 pawns of gold from Thirunallar Saneeswarar temple priest

ரோகிணி திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த 21 ஆம் தேதி மாலை பெண் ஒருவர் சந்தித்தார். அவர் அருகில் இருந்த இளைஞரை தனது மகன் வெங்கடேஷ் என்றும் அவருக்கு திருமணம் தடைபடுவதால் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய வந்துள்ளதாக அந்த பெண் கூறினார்.

கடந்த முறை எனது மகளை திருமணத் தடை விலக அழைத்து வந்தேன். அவளுக்கு நீங்கள்தான் பரிகார பூஜை செய்து சனீஸ்வரரை தரிசனம் செய்ய வைத்தீர்கள். இதனால் அவளுக்கு திருமணம் ஆனது. அது போல் என் மகனுக்கும் திருமணமாக வேண்டி, உங்களை பார்க்க வந்தோம் என்றார் அந்த பெண். ரோகிணியும் அதற்கென்ன சிறப்பாக செய்துவிடலாம் என கூறியுள்ளார்.

 Woman and youth looted 20 pawns of gold from Thirunallar Saneeswarar temple priest

இந்த நிலையில் சிறிது நேரத்திற்கு பின்னர் அர்ச்சகர் ரோகிணி வீட்டிற்கு மகனுடன் சென்ற அந்த பெண் தங்குவதற்கு ரூம் கிடைக்காததால் உங்கள் வீட்டிலேயே தங்கி கொள்ளலாமா என கேட்டும் காலை சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தருமாறும் ரோகிணியிடம் கேட்டுக் கொண்டார்.

இதை நம்பிய அர்ச்சகர் ரோகிணி இருவரையும் வீட்டில் தங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்தார். பின்னர் அந்த பெண்ணும் இளைஞரும் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு ரோகிணிக்கும் அவருடைய மனைவிக்கும் டிபன் பார்சல் வாங்கி வந்து கொடுத்தனர். அதை இருவரும் சாப்பிட்ட பின்னர் தூங்க சென்றனர்.

மறுநாள் காலை ரோகிணி எழுந்து பார்த்த போது அந்த பெண்ணையும், இளைஞரையும் காணவில்லை. இதன் அதிர்ச்சி அடைந்த ரோகிணி வீடு முழுவதும் அவர்களை தேடியுள்ளார். அப்போது படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார்.

உடனே அங்கே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த தங்க சங்கிலி, மோதிரம், நெக்லஸ் உள்ளிட்ட 20 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ 1.40 லட்சம் பணம் திருடு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரோகிணி திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

 Woman and youth looted 20 pawns of gold from Thirunallar Saneeswarar temple priest

இன்ஸ்பெக்டர் அறிவு செல்வம் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். பீரோவை அந்த பெண்ணும் இளைஞரும் உடைத்து திருடியுள்ளனர்.

இதனால் ரோகிணிக்கு உணவு வாங்கி வந்த பார்சலில் மயக்க மருந்து ஏதாவது கலந்து கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பக்தர்கள் போல் நடித்து அர்ச்சகர் வீட்டில் பணம், நகைகளை திருடிச் சென்ற பெண்ணையும் இளைஞரையும் போலீஸார் தேடி வருகிறார்கள். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களை வீட்டில் தங்க வைப்பதும், அவர்கள் கொடுக்கும் உணவை வாங்கி உண்பதும் இது போன்ற சிக்கலில் முடியும் என போலீஸார் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+