சென்னை விமான நிலையத்தில்.. பொன்னியின் செல்வன் படம் பார்க்க 2 பிள்ளைகளுடன் சென்ற பெண் திடீர் தற்கொலை
சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள திரையரங்கில் 2 பிள்ளைகளுடன் பொன்னியின் செல்வன் - 2 படம் பார்க்க சென்ற பெண் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள, புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் செயல்பட்டுக்கு வந்தது.
இந்த புதிய முனையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால், திரையரங்குகள் போன்றவைகளும் உள்ளன.

விமான நிலையத்தின் புதிய முனையத்தில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் - 2 படமும் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்க தனது 2 பிள்ளைகளுடன் வந்த பெண் ஒருவர் , விமான நிலையத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சென்னையை அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி. அமெரிக்காவில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 33). பாலாஜி - ஐஸ்வர்யா தம்பதிக்கு 9 ஆம் வகுப்பு படித்து வரும் மகனும் மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வரும் மகளும் உள்ளனர்.
பாலாஜி அமெரிக்காவில் வேலை செய்து வரும் நிலையில், அவரது மனைவி ஐஸ்வர்யா தனது பிள்ளைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே கடுமையான மன அழுத்தத்தால் ஐஸ்வர்யா பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், சென்னை விமான நிலையத்தில் உள்ள தியேட்டருக்கு பொன்னியின் செல்வன் படம் பார்ப்பதற்காக நேற்று இரவு தனது இரண்டு பிள்ளைகளுடன் ஐஸ்வர்யா வந்துள்ளார்.

படம் பார்த்துக் கொண்டு இருந்த போது பாத்ரூம் சென்று விட்டு வருவதாக தனது இரண்டு பிள்ளைகளிடம் கூறி விட்டு தியேட்டரை விட்டு வெளியே சென்ற ஐஸ்வர்யா, உள்நாட்டு முனையம் வழியாக பன்னடுக்கு கார் பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென கார் பார்க்கிங்கின் 4-வது தளத்தில் இருந்து ஐஸ்வர்யா கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்தார். 4-வது மாடியில் இருந்து குதித்ததில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஐஸ்வர்யா உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த கார் ஓட்டுநர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்த சென்னை விமான நிலைய போலீசார், நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரது உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படம் பார்ப்பதாக தனது இரண்டு பிள்ளைகளுடன் விமான நிலைய தியேட்டருக்கு வந்த ஐஸ்வர்யா, தனது பிள்ளைகளை தியேட்டரிலேயே தவிக்க விட்டு விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications