கணவரை கைது செய்ய வந்த போலீஸ் கண்முன்னே தீக்குளித்த மனைவி பலி.. சென்னையில் பரபரப்பு
சென்னையில் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை: குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவரை கைது செய்ய சென்ற போலீசார் கண்முன்னே, அவரது மனைவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. சமீபத்தில் சிறைக்கு சென்று விட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் மற்றொரு வழக்கில், மோகனை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் சிவமணி மற்றும் உதவி ஆய்வாளர் சேகர் உட்பட சில போலீசார் வந்தனர். அப்போது மோகனை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு மோகன் மனைவி பத்மாவதி எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனிடையே திடீரென பத்மாவதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடல் கருகிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பத்மாவதி பரிதாபமாக இறந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பத்மாவதி உயிரிழப்புக்கு காரணமான காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை பணியிடை நீக்கம் செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பத்மாவதியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின் பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications