ஒரு நாய்க்குட்டிக்காக சாந்தி தீக்குளித்தது சரியா?

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தான் ஆசையாக வளர்த்து வந்த நாய்க்குட்டியை தூக்கி தனது கணவர் வெளியில் விட்டு விட்டு வந்ததால் ஆத்திரமடைந்த மனைவி தீக்குளித்து விட்டார். தற்போது சீரியஸாக இருக்கிறது அவரது உடல் நிலை.

சுல்தான்பேட்டை கைக்கோளர் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சாந்தி (40). சாந்திக்கு நாய் என்றால் கொள்ளைப் பிரியமாம். கடந்த இரண்டு மாதங்களாக நாய்க்குட்டி ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். ஆனால் பெருமாளுக்கு இது பிடிக்கவில்லை. அதைக் கொண்டு போய் விட்டு விட்டு என்று கூறி வந்தார். ஆனால் சாந்தி கேட்கவில்லை. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்தது.

Woman immolates herself in Paramathi Vellore

இந்த நிலையில் நேற்று நாயைக் கொண்டு போய் எங்கேயோ விட்டு விட்டு வந்து விட்டார் பெருமாள். அவ்வளவுதான் ஆத்திரமடைந்தார் சாந்தி. வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி தீவைத்துக் கொண்டார். அலறித் துடித்த அவரது குரலைக் கேட்டு கணவர் பெருமாள், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+