கணவர் மரணம்: 2 பச்சிளம் குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பெரியகோட்டை சக்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சங்கீத் குமார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 24). இவர்களுக்கு கீர்த்தி மாலினி (4), மதுமிதா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். சங்கீத்குமார் கடந்த 2 மாதங் களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதையொட்டி அவர் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் சில நாட்களும், பெற்றோர் வீட்டில் சில நாட்களுமாக இருந்து வந்துள்ளார். கணவர் இறந்த துக்கத்தால் காளீஸ்வரி யாருடனும் சரியாகப் பேசாமல் சோகத்துடன் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த காளீஸ்வரி நேற்று மாலையில் 2 குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். பின்னர் அவரும் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்டநேரமாக வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வடமதுரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா சம்பவ இடத்துக்கு வந்து காளீஸ்வரி மற்றும் அவரது குழந்தைகள் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் காளீஸ்வரி வீட்டில் இருந்த ஒரு கடிதத்தையும் கைப்பற்றினார்.
அந்த கடிதத்தில் என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடமதுரை சுற்றுவட்டாரா கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications