சென்னை அருகே பலாத்கார முயற்சியில் இளம்பெண் அடித்து கொலை?
சென்னை: குன்றத்தூர் அருகே இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலாத்கார முயற்சியில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சென்னை அடுத்த குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஆத்தனஞ்சேரி சக்தி நகரை சேர்ந்தவர் கோவிந்தனின் மனைவி திவ்யா (வயது 28). இவர்களுக்கு தர்ஷன் (வயது 4) என்ற மகனும், ரூபிகா (வயது3) என்ற மகளும் உள்ளனர்.

இருவரும் படப்பை அடுத்த சாலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கின்றனர். இவர்களது வீட்டின் மாடியில் கோவிந்தனின் அக்கா மகள் அமுதா குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது கணவர் டெய்லர்.
கோவிந்தனின் பிள்ளைகள் வேன் மூலம் வீடு திரும்பும்போது அவர்களை அமுதாதான் அழைத்து கொண்டு வீட்டில் வந்துவிடுவாராம். வழக்கம்போல நேற்றும் திவ்யாவின் குழந்தைகள் 2 பேரையும் அமுதா வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார்.
அப்போது திவ்யாவின் வீடு திறந்திருந்தது... ஆனால் திவ்யாவை காணவில்லை. இதனல் திவ்யாவை அவர் தேடியபோது, குளியலறையில் பலத்த காயங்களுடன் மூச்சு பேச்சில்லாமல் திவ்யா இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதனால் அலறியபடி பக்கத்து வீட்டுக்காரர்களை அமுதா வரவழைத்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
திவ்யாவின் முகம், கழுத்தில் கடுமையான காயங்கள் இருந்தன. தாலி சரடு, கம்மல், வளையல் உள்ளிட்ட நகைகள் சிதறி கிடந்தன. நகை கொள்ளை மற்றும் பலாத்கார முயற்சியில் இக்கொலை நடந்திருக்கலாம் என சந்தேகித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications