கள்ளக் காதலனை உதறிவிட்டு வர மறுப்பு- நடுரோட்டில் மனைவிக்கு சரமாரி சதக் சதக் குத்து- கணவர் கைது
கள்ளக் காதலனை உதற மறுத்த மனைவியை நடுரோட்டில் கத்தியால் குத்தி கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு: கள்ளக் காதலனை கைவிட்டு வர மறுத்த மனைவியை ஈரோடு அருகே நடுரோட்டில் மாமியார் முன்னிலையிலேயே சராமரியாக கத்தியால் குத்தி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் சுப்பிரமணியவலசுவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சீதா. தறிப்பட்டையில் தொழிலாளர்களாக பணிபுரியும் இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

கள்ளக் காதல்
இவர்களது குடியிருப்பு பகுதியில் சேலம் சங்ககிரியைச் சேர்ந்த பிரபு என்பவர் தங்கியிருந்து சலூனில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த பிரபுவுக்கும் நாகராஜ் மனைவி சீதாவுக்கும் 'லிங்க்' ஏற்பட்டு கள்ளக் காதலானது.

சங்ககிரிக்கு எஸ்கேப்
ஒருகட்டத்தில் கள்ளக் காதல் ஜோடி சங்ககிரிக்கு எஸ்கேப்பானது. இதற்கு சீதாவின் தாய் ரேணுகாவும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் சுப்பிரமணியன்வலசில் உள்ள தாய் ரேணுகா வீட்டுக்கு ஹாயாக திரும்பி வந்துள்ளார் சீதா.

சரமாரி கத்தி குத்து
இதைக் கேள்விபட்டு ஆத்திரத்துடன் ரேணுகா வீட்டுக்குப் போய் ஓடிப்போன மனைவி சீதாவை அடித்து துவைத்திருக்கிறார் நாகராஜன். இதிலும் ஆத்திரம் குறையாததால் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதக் சதக் என கை ஓயும் வரை சீதாவை குத்தி குதறியிருக்கிறார் நாகராஜன்.

கைது
இதனால் சீதா அப்படியே ரத்த வெள்ளத்தில் விழுந்து துடிதுடித்து இறந்து போனார். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார் நாகராஜ். பின்னர் தலைமறைவாக இருந்த நாகராஜை போலீஸ் கைது செய்தது. போலீசாரிடம் மனைவியின் கள்ளக் காதலை தாங்க முடியாமல் குத்தி கொலை செய்தேன் என ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார் நாகராஜன்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications