பஸ் கைப்பிடி கழன்று விழுந்து பெண் படுகாயம்...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் அரசுப் பேருந்தில் பயணித்த இளம் பெண் பஸ்சின் கைப்பிடி கழன்று விழுந்ததில் படுகாயமடைந்தார். அவருக்கு அரசு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை கிடைக்காத நிலை ஏற்பட்டது.

சென்னை துறைமுகம் அருகே 56 என் மாநகர பேருந்தில் எண்ணூர் நெட்டுக்குப்பத்தைச் சேர்ந்த லட்சு என்ற பெண் பயணம் செய்தார். அப்போது, பஸ்சில் இருந்த பயணிகள் கைப்பிடி கம்பி உடைந்து தலையில் விழுந்துள்ளது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
உடனடியாக அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் உடனடியாக மருத்துவர்கள் வந்து அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காததால் அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. இதன் காரணமாக வலியைப் பொறுக்க முடியாமல் பொறுத்துக் கொண்டு அப்பெண் ஸ்டிரெச்சரிலேயே படுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications