திருடியதை தட்டி கேட்ட நீல்கிரீஸ் உரிமையாளரை அடித்து உதைத்த பெண் கான்ஸ்டபிள் கணவர்..சென்னையில் திடுக்
Recommended Video

சென்னை: பெண் கான்ஸ்டபிளின் கணவர் மகன் ஆகியோர் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை அடித்து உதைத்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூரிலுள்ள நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் நந்தினி என்ற கான்ஸ்டபிள் 100 ரூபாய் மதிப்புள்ள சாக்லேட்டுகள் உள்ளிட்டவற்றை திருடியது சிசிடிவியில் பதிவானது. இதையடுத்து அவரிடமிருந்து போராடி அந்த பொருட்களை மீட்டெடுத்த கடை ஊழியர்கள், திருடியதை ஒப்புக்கொண்டு கையெழுத்திட கோரினர். அவரும் கையெழுத்திட்டு கிளம்பி சென்றார்.

ஆனால், வீட்டுக்கு சென்று தனது கணவர் மற்றும் மகனிடம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி அழுதுள்ளார். நந்தினியின் கணவன், மகன் உள்ளிட்ட மூவர் கடைக்கு வந்து கடை உரிமையாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவர் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாாகியுள்ளன. கடை பெண் ஊழியர் ஒருவர் கூறுகையில், நந்தினி கணவன், அசிங்க அசிங்கமாக பேசி என்னையும் அடிக்க வந்தார். நான் எப்படியோ தப்பிவிட்டேன். எங்கள் உரிமையாளர் அங்கு வந்தபோது, அவரை பேசவே விடாமல் போட்டு அடித்துவிட்டனர்.

அவரை கீழே தள்ளி விட்டு ரத்தம் வர மாதிரி அடிச்சிவிட்டனர் என்றார்.
காவல் துறையில் பலர் உயிரை பணையம் வைத்து பணியாற்றி வரும் நிலையில் காவலர் நந்தினி அரங்கேற்றியுள்ள திருட்டு சம்பவம் ஒட்டுமொத்த காவல் துறைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனிடையே நந்தினியை சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட அவர் கணவர் உள்ளிட்டோர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications