உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள்- சிஐஎஸ்எப் வீரர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம்
சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்ற வளாகத்தில் சோதனை செய்யும் போது பெண் வழக்கறிஞர்களை விடியோ பதிவு செய்வதை எதிர்த்து வழக்கறிஞர்களுக்கும், சிஐஎஸ்எப் வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வளாகம் கடந்த 16-ம் தேதி முதல் மத்திய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அன்று முதல் முறையான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே சோதனைகளுக்குப் பிறகு உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்துக்கு வரும் பெண் வழக்கறிஞர்களை சோதனை செய்யும் போது அது விடியோ பதிவு செய்யப்படுகிறது. இதற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மத்தியப் படையினருடன் வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சல சலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பெண் வழக்கறிஞர்களை சோதனை செய்ய அமைக்கப்பட்டிருந்த திரைச் சீலைகளையும் வழக்குரைஞர்கள் கிழித்தெறிந்தனர்.












Click it and Unblock the Notifications