சட்டசபை முன் பெரும் பரபரப்பு.. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீக்குளிக்க முயற்சி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையின் முன்பாக திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஞ்சனா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை கூட்டத் தொடர் பலத்த பாதுகாப்புடன் நடந்து கொண்டிருக்கிறது. சட்டசபை வளாகத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திருவொற்றியூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஞ்சனா திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சக போலீஸ் அதிகாரிகள் காஞ்சனாவை தடுத்து நிறுத்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இன்ஸ்பெக்டர் காஞ்சனா தீக்குளிக்க முயற்சித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications