For Quick Alerts
For Daily Alerts
Just In
எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு கருப்பு கொடி.. அடையாறில் திரண்ட பெண்கள் கைது
கூவத்தூர் பகுதியிலுள்ள ரிசார்ட்டிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் கார்கள் மூலம், சட்டசபைக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பேரணி கிளம்பிய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிராக கருப்பு கொடி காண்பிக்க திரண்ட பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கூவத்தூர் பகுதியிலுள்ள ரிசார்ட்டிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் கார்கள் மூலம், சட்டசபைக்கு அழைத்துவரப்பட்டனர். காலை சுமார் 8.20 மணிக்கு அவர்கள் கிளம்பினர். இந்நிலையில் காலை 9.30 மணியளவில் சென்னை, அடையாறு, சத்யா ஸ்டுடியோ அருகே, எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிராக பெண்கள் பேரணியாக கிளம்பினர்.
கருப்பு கொடிகளை காண்பிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பெண்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிச்சாமி, திருக்குறளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
Comments
English summary
Women who protested against Edappadi Palanichami are arrested in Chennai.