For Quick Alerts
For Daily Alerts
Just In
காட்சி பிழையாக இல்லாமல் சமுதாயத்தின் சாட்சி சிறகுகளாய் மகளிர்
மாதவ மங்கையரே,
பேதைக்கும் பெதம்பைக்கும் மங்கைக்கும் மடந்தைக்கும்
அரிவைக்கும் தெரிவைக்கும்
பேரிளம் பெண்களுக்கும்
வாழ்வில் பல
களம் காணும்
உங்கள் கனவுகள்
காட்சி பிழையாக இல்லாமல்
சமுதாயத்தின் சாட்சி சிறகுகளாய் - விட்டத்தில்
மட்டும் வட்டமிடும்
பட்சியாயன்றி-விண்ணைத்
துளைத்து அதன்
வெளியில் விஞ்ஞான வித்தைகள் காட்டி
வதைத்தவனே
வியக்கும் வகையில்
வீரியமாய் செல்லும்
விண்கலனாய்
சாதனைகள் படைக்க
வாழ்த்துகிறேன்.
-ஆ.ஜோஷி ஆலென்
Comments
English summary
Here is a poem on the International women's day
Story first published: Thursday, March 9, 2017, 3:06 [IST]