சந்தனப் பேழையில் பொறிக்கப்பட்ட வாசகத்தை 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்த கருணாநிதி
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்ட சந்தனப் பேழையில் எழுதப்பட்ட வாசகம் அவருடையது தான்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சந்தனப் பேழையில் வைத்து மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த பேழையில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று எழுதப்பட்டிருந்தது.
அந்த வாசகத்தை ஸ்டாலின் எழுதச் சொல்லவில்லை மாறாக கருணாநிதி தான் எழுதச் சொல்லியுள்ளார். தன் நினைவிடத்தில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று எழுத வேண்டும் என கருணாநிதி தான் எழுதிய சின்ன சின்ன மலர்கள் நூலில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விஷயத்தை ஸ்டாலின் தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். சூரியன் எழும் முன்பு எழுந்து கடைசி ஆளாக தூங்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார் கருணாநிதி.
இறந்த பிறகும் போராடி வென்ற வெற்றித் திருமகன் மெரினாவில் விதைக்கப்பட்டுள்ளார்.