இந்தியாவில் எய்ட்ஸில் சிக்கித் தவிக்கும் 2.80 லட்சம் பேர்.. இன்று உலக எய்ட்ஸ் தினம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: உலக எய்ட்ஸ் தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை ஒட்டி அந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் சென்னை மெரினா கடற்கரையில் பேரணி நடத்தினர்.

எய்ட்ஸ் விழிப்புணர்வை விளக்கும் விதமாக பதாகைகளை ஏந்தியபடி ஏராளமான மாணவ, மாணவிகள் கலங்கரை விளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை பேரணியாக சென்றனர்.

இந்தியின் டெவலப்மென்ட் பவுண்டேஷன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதேபோல எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அடையாறில் மாணவிகள் மனித சங்கிலியில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக அளவில் 7 கோடியே 80 லட்சம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications