சென்னையில் பதற்றம் அதிகரிப்பு.. வீட்டிற்கு விரையும் மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசல்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமாகி இருப்பதால், தற்போது சென்னை முழுக்க பதற்றம் நிலவுகிறது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமாகி இருப்பதால், தற்போது சென்னை முழுக்க பதற்றம் நிலவுகிறது. இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஆகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை அளவில் நலிவடைந்து உள்ளது. காவேரி மருத்துவமனையில் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் அவர் உடல்நிலை கவலைக்கிடமாகவும் நிலையற்றும் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் சென்னையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. பல அலுவலகங்கள், கடைகள் சீக்கிரமே மூடப்பட்டுள்ளது. அலுவலகங்கள் விரைவாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பணியாளர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் வீடு திரும்புகிறார்கள்.
இதனால் சென்னையில் கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு, பெருங்களத்தூர், வண்டலூர், கோயம்பேடு, விருகம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர், டி நகர், நுங்கம்பாக்கம், ஆவடி, காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, பல்லாவரம், வளசரவாக்கம், மீனம்பாக்கம், எக்மோர் ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்கள் கூகுளில் காட்டப்பட்டுள்ளது.