மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவா? வைகைசெல்வன் பதில்
சென்னை: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு சென்னையில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் பதிலளித்தார்.
அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்காகவே சட்டசபையை கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். 30 வருடங்கள் தொடர்ச்சியாக போராடி நதிநீர் உரிமையை நிலைநாட்டியவர் ஜெயலலிதா. அவரது அரசு அதே கொள்கையுடன் போராடி வருகிறது.

நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளோம், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதுபோன்ற தொடர் அழுத்தங்களை மத்திய அரசுக்கு கொடுப்பதால், விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்ககை எடுக்கும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு, இதுபற்றி ஓபிஎஸ், ஈபிஎஸ் முடிவெடுப்பார்கள். அதிமுகவின் உயர்நிலைக் கூடி இதுபற்றி முடிவு எடுக்கும் என்று வைகை செல்வன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications