சாகித்ய அகாடமி விருது பெற்ற தி க சிவசங்கரன் மரணம்
நெல்லை: சாகித்ய அகாடமி விருது பெற்ற முதுபெரும் எழுத்தாளர் நெல்லை மண்ணின் மைந்தர் விமர்சகர், தி க சிவசங்கரன் நெல்லையில் காலமானார்
தி. க. சிவசங்கரன் மார்க்சிய திறனாய்வாளர். 1925ல் திருநெல்வேலி நகரில் பிறந்தவர். தி.க.சி.யின் வாழ்க்கை குறித்தும்-எழுத்துலகம் குறித்தும் 2007-ஆம் ஆண்டு சென்னையில் இயங்கி வரும் தமிழ்க்கூடம் என்ற கலை-இலக்கிய அமைப்பு ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியது.
21-இ,சுடலை மாடன் தெரு,திருநெல்வேலி டவுன் என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தை எழுத்தாளரும் இயக்குநருமான எஸ். ராஜகுமாரன் எழுதி-இயக்கியுள்ளார்.

திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் 2008-க்கான சிறந்த ஆவணப்பட விருது மற்றும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த ஆவணப்பட விருது-2008 ஆகிய விருதுகள் இந்த ஆவணப்படத்திற்கு கிடைத்தன.
கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 25.3.2014 இரவு 11.30 மணியளவில் காலமானார்.
இவரது மதிப்புரைகளும் கட்டுரைகளும் முதிய வயதில்தான் திகசி கட்டுரைகள் என இரு பகுதிகளாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இத்தொகுதிகளுக்கு 2000 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது

மறைவுக்கு முன் நல்லகண்ணுவை பார்க்க விரும்பிய தி.க.சி.
23.ந் தேதி இந்திய கம்யூ.கட்சியை சார்ந்த சேவியர், தி.க.சி.யை பார்க்க சென்றபோது அவரிடம் தி.க.சி. அவருடைய சக தோழர், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவை நான் சந்திக்கவேண்டும் சொல்லியுள்ளார்.
இதையடுத்து நேற்று மாலை 4 மணிக்கு நல்லக்கண்ணுவை சேவியர் அழைத்துச் சென்றுள்ளார்..நான் நல்லகண்ணு வந்துள்ளேன் என்று கூப்பிட்டார். அதற்கு தி.க.சி. என்னால் முடியவில்லை என்றுமட்டும் பதில் சொல்லியுள்ளார். நலம் விசாரித்தப்பின் சிறிது நேரம் அவரோடு அமர்ந்த நல்லக் கண்ணு புறப்பட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் மரணத்தைத் தழுவியுள்ளார். இரவில் அவர் மறைந்த செய்தி கேட்டு நல்லக்கண்ணு வேதனை அடைந்துள்ளார்.
தி.க.சி.க்கு மார்ச் 30 பிறந்தநாளாகும். அன்றுடன் அவருக்கு 90 வயது நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications