ஜெ. விடுதலை... சந்தோஷத்தில் ‘தலைகீழாக’ நடந்த யோகா மாஸ்டர்!
கோவை: கோவையில் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலையான மகிழ்ச்சியில் யோகா மாஸ்டர் ஒருவர் 2 கீ.மீ தலைகீழாக நடந்து சாகசம் செய்துள்ளார்.
கோவை ரங்கே கவுடர் வீதியை சேர்ந்தவர் சத்ரபதி (50). யோகா மாஸ்டரான சத்ரபதி, இன்று காலை கோவையில் டவுன்ஹால், ரங்கேகவுடர் வீதி, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட மக்கள் அதிகம் காணப்படும் பகுதிகளில் தலைகீழாக நடந்து சென்றார். சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு தலைகீழாக நடந்து சென்ற சத்ரபதி மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர்.

பின்னர் தனது சாகசம் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-
யோகா மாஸ்டரான நான் இதுவரை பல்வேறு சாகசங்களை செய்துள்ளேன். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நல்ல ஆளுமைத்திறன் உடையவர். அவரது செயல்பாடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அதை வெளிப்படுத்தும் விதமாக இன்று தலைகீழாக நடந்து எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளேன். மேலும் அடுத்த மாதம் யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி பொதுமக்கள் மத்தியில் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இன்று தலைகீழாக நடந்தேன்' என்றார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications