அலகாபாத்தில் நுழைய சர்ச்சைக்குரிய பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யநாத்துக்கு தடை
அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நுழைவதற்கு சர்ச்சைக்குரிய பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யநாத்துக்கு அம்மாவட்ட நிர்வாகம் அதிரடி தடை விதித்துள்ளது
பா.ஜ.க. எம்.பி, யோகி ஆதித்யநாத் சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இஸ்லாமியர்களுக்கு எதிராக பகிரங்கமாக அவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து பேசிவருபவர் ஆதித்யநாத்.

இந்நிலையில் அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் நிகழ்ச்சிக்கு யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அலாகாபாத் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவரான ரிச்சா சிங் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அலகாபாத்துக்குள் நுழைவதற்கு யோகி ஆதித்யநாத்துக்கு தடை விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications