பெற்ற பச்சிளம் பெண் குழந்தையை வேலூர் மருத்துவமனையிலேயே விட்டு சென்ற இளம்தாய்
பெற்ற குழந்தையை மருத்துவமனையிலேயே பெண் ஒருவர் விட்டு சென்றுள்ளார்.
திருவண்ணாமலை: முறைதவறி பிறந்ததால், பெற்ற பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் மருத்துவமனையிலிருந்து விட்டு சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி அருகேயுள்ள உள்ள கிராமம் பையூர். இங்கு வசித்து வருபவர் லட்சுமி. 18 வயதான இவர், ஆரணியை சேர்ந்த ஒருவரை கடந்த 2 வருடங்களாக விரும்பி வந்துள்ளார்.

கர்ப்பமடைந்த லட்சுமி
இதனால் இருவரும் நெக்கமாக பழகினார்கள். ஒருகட்டத்தில் திருமணமாகாமலேயே லட்சுமி கர்ப்பமடைந்தார். இதைப்பற்றி அந்த நபருடன் சொல்ல முயன்றபோது அவர் ஏற்கனவே திருமணமானவர் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி, அவரை விட்டு விலகினார்.

ஊருக்கு திரும்பிய லட்சுமி
வீட்டுக்கு தெரியாமல் இதனை மறைத்து வந்த லட்சுமி. கர்ப்பகாலம் நெருங்கியதும், வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. பெற்ற குழந்தை என்றும் பாராமல், அந்த குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பி விட்டார் லட்சுமி.

குழந்தையை விரும்பவில்லை
இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டபோது லட்சுமி கொடுத்த முகவரியை வைத்து அவரை தேடி வந்து குழந்தையை ஒப்படைத்துவிட்டு சென்றனர். ஆனாலும் அந்த குழந்தை தன்னுடன் இருப்பதை லட்சுமி விரும்பவில்லை.

நோயாளி போல நடித்தார்
ஆரணி அருகே உள்ள எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேண்டுமென்றே நோயாளி போல சேர்ந்து தங்கி, பின்னர் அங்கு தன் 7 நாள் குழந்தையை மீண்டும் விட்டுவிட்டு வந்துவிட்டார். இதனால் ஆரம்பசுகாதார மருத்துவர்கள், திருவண்ணாமலை சமூக பாதுகாப்புதுறையிடம் அந்த குழந்தையை ஒப்படைத்தனர். அங்கு அந்த குழந்தை நல்ல முறையில் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications