சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி இளம்பெண் படுகொலை- போலீஸ் விசாரணை
கரூர்: கரூரில் இளம்பெண் ஒருவரை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கரூர் நகராட்சியை அடுத்துள்ள காமராஜபுரம், திருநகர் மூன்றாவது கிராஸ் பகுதியில் தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் குத்தகைக்கு எடுத்து ஐந்தாண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.
தற்போது, இந்நிலத்தில் சோளம் விதைத்துள்ளார். நேற்று மதியம் வழக்கம் போல ராமலிங்கம் தோட்டத்துக்கு சென்றார். அப்போது கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால் கிணற்றை எட்டி பார்த்தார்.
உள்ளே வெள்ளை நிற பிளாஸ்டிக் சாக்குப் பையில் ஒரு மனித உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நில உரிமையாளர் தர்மலிங்கத்துக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.
கரூர் டி.எஸ்.பி பெரிய்யயா, பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீஸார் கிணற்றில் மிதந்த மூட்டை வெளியே எடுத்தனர். மூட்டைக்குள் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் இருந்தது.
அந்த இளம் பெண் யார்? என்ன காரணத்தினால் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டார்? அல்லது வெளியூரில் கொலை செய்தா கொலையாளிகள் உடலை கொண்டுவந்து கிணற்றில் போட்டுள்ளனரா? என்பது குறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கரூர் நகரில் கடந்த சில நாட்களாக காணாமல் போன பெண்களின் புகைப்படங்களை வைத்து, உடலை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications