தங்கதமிழ்செல்வனின் மைத்துனர் மருமகள் தற்கொலை.. நிலக்கோட்டையில் பரபரப்பு.. சாலை மறியல்
நிலக்கோட்டையில் திருமணமான 2 வருடத்தில் இளம் பெண் தூக்கில் தொங்கினார்
Recommended Video

நிலக்கோட்டை: வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் மரணம் தொடர்பாக டிடிவி தினகரன் அணி கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இ.பி காலனியைச் சேர்ந்தவர் விவேக்பாண்டி. இவர் தினகரன் அணி கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வனின் மைத்துனர் மகன் ஆவார்.

விவேக் பாண்டிக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த சபிதாவுக்கும் இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே வரதட்சணை கேட்டு விவேக்பாண்டி துன்புறுத்தியதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த சபிதா வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு, துப்பாட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து நேற்றிரவு விரைந்து வந்த தங்கதமிழ்ச்செல்வன் சபிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இன்று சபிதா உறவினர்கள் விவேக்பாண்டி சபிதாவை கொலை செய்து தூக்கில் மாட்டியதாகவும், சபிதாவின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கூறி சாலை மறியல் செய்தனர்.

நிலக்கோட்டை டி.எஸ்.பி சமரசம் செய்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர் தங்க தமிழ்ச்செல்வன் தனது செல்வாக்கை பயன்படுத்தி விவேக் பாண்டியின் குற்றத்தை மறைப்பதாக அப்போது அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications