சென்னை மெட்ரோ ரயிலை இயக்கிய 28 வயது இளம் புயல்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலை இயக்கியவர் ப்ரீத்தி என்ற 28 வயது பெண் என்ஜினீயர் ஆவார். இந்த இளம்புயல்தான் சென்னை மெட்ரோ ரயிலின் முதல் சவாரியை நடத்தியவர் ஆவார்.
சென்னையின் புதிய சரித்திரமாக, சென்னைவாசிகளின் நீண்டநாள் கனவாக இருந்து வந்த மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரசிங் மூலம் தொடங்கி வைத்தார்.

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று பகல் 12 மணிக்கு தொடங்கி வைத்தார்.
இந்த மெட்ரோ ரயிலை இயக்கியவர் 28 வயதான ப்ரீத்தி ஆவார். இவர் அரசு தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்தவர்.
‘சென்னையின் கனவு திட்டமான மெட்ரோ ரயிலை முதன்முறையாக இயக்கியது என் மகள் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது' என ப்ரீத்தியின் தந்தை அன்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகளுக்கு ரயில் என்ஜின் டிரைவர் ஆக வேண்டும் என்பது கனவாக இருந்தது. இதற்காக தான் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு மெட்ரோ ரயில் வேலைக்கு விண்ணப்பித்தார். தேர்வானார்.
மொத்தம் 3 பேர் கடைசியாக பயிற்சிக்கு வந்துள்ளனர். அதில் எனது மகள் தேர்வானார். இது எனக்கு மகிழ்ச்சி தந்தது.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் டெல்லியில் பயிற்சி எடுத்துள்ளார் ப்ரீத்தி. அதன் பின்னரே சென்னை மெட்ரோ ரயிலை இயக்க களம் குதித்தார்.












Click it and Unblock the Notifications