Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலங்காநல்லூர் போராட்டத்தில் விபரீதம் - தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்தபோது வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தினர் அவரைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி விட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகள் பெரும் கொந்தளிப்பில் உள்ளன. ஜல்லிக்கட்டுக்கு நடத்த அனுமதிக்கக் கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன.

Youngster attempts self immolation

ஊர் மக்கள் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடவில்லை. இந்த நிலையில் இன்று அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தின்போது ஒரு வாலிபர் திடீரென தனது தலையில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு விட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. அவரது செயலால் மேலும் வேதனை அடைந்த போராட்டம் நடத்திய மக்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து பலரின் உயிரைப் பறிக்கப் பார்க்கிறார்களா என்று ஆவேசமாக கோஷமிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+