சென்னையில் முகம் சிதைந்த நிலையில் ஆண் பிணம்- யார் இவர்? (படம்)
சென்னை: அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் முகம் சிதைந்த நிலையில் வாலிபர் ஒருவரிடன் சடலம் மீட்கப் பட்டுள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சென்னை அம்பத்தூரில் உள்ள பட்டரவாக்கம் ரயில்வே பாலம் அருகே நேற்று முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப் பட்டது. உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் பூந்தமல்லி செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த லியோ கனகராஜ் (28) என தெரிய வந்துள்ளது. அரக்கோணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கனகராஜ், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விஷம் குடித்துத் தற்கொலை என்றால், முகம் சிதைந்தது எவ்வாறு என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை கட்டாயமாக விஷம் கொடுத்து அந்த வாலிபர் கொல்லப் பட்டிருக்கலாம், பின்னர் முகம் அடையாளம் தெரியாமல் இருக்க சிதைக்கப் பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இது கொலையாக இருந்தால், அதற்கான காரணம் என்ன, கொலையாளிகள் யார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.