For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”விதி” பட ஸ்டைலில் ”டைப்” அடிக்க வந்த பெண்ணுக்கு ”தப்பான” தொந்தரவு கொடுத்தவர் கைது…

Google Oneindia Tamil News

கோவை: தட்டச்சு செய்ய வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், ஆனைகட்டி அருகே உள்ள கே.கே.நகரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர் தடாகம்ரோடு, டி.வி.எஸ் நகர் அருகே டைப்பிங் அலுவலகம் வைத்துள்ளார்.

இங்கு தட்டச்சு பணிக்காக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் வந்தார். அப்போது, கடையில் உமாமகேஸ்வரியின் கணவர் ஆனந்த் மட்டுமே இருந்துள்ளார்.

ஆனந்த் டைப் செய்யவந்த அப்பெண்ணிடத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், இதை எதிர்த்து பேசிய விஜயலட்சுமியை , ஆனந்த் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விஜயலட்சுமி துடியலுார் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நெல்சன், ஆனந்தை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, மிரட்டுதல் பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

English summary
Type writing institute owner's husband allegedly tried to molest a girl who came to type some papers. She gave complaint about him in police. Police filed the case and arrested the culprit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X