வடபழனி ஃபோரம் மாலில் மீண்டும் ஒருவர் தற்கொலை
சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் மீண்டும் ஒரு இளைஞர் தற்கொலை செய்துக் கொண்டார்.
சென்னை: வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் வேலூர் இளைஞர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூரைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் சென்னையில் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் இவரை விரும்பவில்லையாம்.

அந்த பெண்ணிடம் எத்தனையோ முறை கேட்டும் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் யுவராஜ் விரக்தி அடைந்தார். வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மாலுக்கு இன்று காலை சென்றார்.
அப்போது அங்கு மிகவும் உயரமான மாடிக்கு சென்ற அவர் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நிவேதா ஹரி என்ற பிளஸ் 2 மாணவி ஃபோரம் மாலில் 4-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications